தேசிய பாடசாலைகள் தொடர்பில் புதிய கல்வி அமைச்சரின் தீர்மானம்

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடிதங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளின் விடுமுறைக் காலம் நிறைவடைந்த பின்னர் இது தொடர்பில் கொள்ளை ரீதியான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர். வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *